Tuesday 11 September 2012

இந்தியா


யார் இந்த உதயகுமார்?


இந்த வீடியோவை பார்த்து அதற்க்கான் விடையை தேடுவோம்..http://www.youtube.com/watch?v=-qevsth2NHM&feature=colike



கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் நூலில் இருந்து...

வீதி நாடக கலைஞர் சப்தர் ஹஸ்மி கொலை செய்யப்பட்டபத்தாவது நினைவு விழாதஸ்தக் தில்லியில் 1998ல் ஒரு பெரும் சர்வதேசவிழாவாக கொண்டாடப்பட்டது.அங்கு உதயகுமார் ஹிந்துத்துவ அரசியலின் போக்குகள்குறித்து மிககாத்திரமான பார்வையுடன் ஒரு சொற்பொழிவைநிகழ்த்தினார். அவரது பேச்சுஅன்று ஹிந்துத்துவத்தின் போக்குகள் குறித்து ஒருசெரிவான உரையாடலைச்சாத்தியமாக்கியது. அன்று மாலை ஒர் உரையாடலின்போது என்.ராம் எனக்கு இவர்ஒரு தமிழர் பெயர் உதயகுமார் என்று அறிமுகம்செய்து வைத்தார்.உதயகுமாருடனான நட்பு அந்த கணத்தில்தான் மலர்ந்தது.அப்பொழுது அவர்அமெரிக்காவின் மினியாஃபாலிசில் உள்ளமினியஸோட்டா பல்கலைக்கழகத்தில் இனம்மற்றும் வறுமை Race and poverty பற்றியஆய்வுத்துறையில் பேராசிரியராகவந்தார். அவரது பல கட்டுரைகளை வாசிக்கத்தொடங்கினேன். இலங்கை பிரச்சினைதொடர்பான Intervention in srilanka: history andprospects ஸும் இந்தியஹிந்துத்துவ அரசியல் தொடர்பான Presenting thepast: the politics ofhindu history writing in india வும் உலகம்வரலாறு சமூகம்சார்அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் அதிர்வுகளைஏற்படுத்தின. அவர் இணையத்தில்அமைதிக்கான சமாதானத்துக்கான ஒரு படிப்பை நடத்திவந்தார். பாஜக அரசுஆட்சிக்கு வந்து இங்கு செய்த பல மோசடிகளை அவர் தன்வலைத்தளத்தில் http://WWW.bjpgovermentwatch.com எழுதிவந்தார். இந்த வலைத்தளம்சார்ந்த ஆலோசனைகளை என்.ராம் அவர்கள் வழங்கினார்.இங்கு அவுட்லுக்,இந்தியாடுடே என பல ஆங்கில பத்திரிக்கைகளில்தொடர்ந்து அவரது கட்டுரைகள்வெளிவந்தன. அவர் அமெரிக்காவில் பணியாற்றியபல்கலைக்கழகத்தில் உள்ளமாணவர்களுக்கு பல இந்திய அறிவுஜீவிகளை அறிமுகம்செய்தார். ஆஷிஷ் நந்தி,என்.ராம், அட்மிரல் ராம்தாஸ், பிரபுல் பித்வாய், அஃசின்விநாயக், க்யான்பிரகாஷ், கே.என்.பணிக்கர், அஸ்கர் அலி என்ஜினியர் எனபல எழுத்தாளர்களை,செயல்பாட்டாளர்களை அவர் அமெரிக்காஅழைத்துச்சென்று பல்கலைக்கழகத்தில்உரைகள் நிகழ்த்தச்செய்தார். அமெரிக்கவாழ் இந்தியர்கள்மத்தியில் மிகவும்சுறுசுறுப்பான செயல்பாட்டாளராக அவர் திகழ்ந்தார்.2007 ல் வாஷிங்டன் டி.சியில் நடந்த விழாவில் வடஅமெரிக்கத்தமிழ்ச்சங்கப்பேரவை அவரது பணிகளைப்பாராட்டிவிருது கொடுத்து கௌரவித்தது.அவரது பிரியத்திற்குறிய பாட்டி புற்று நோயால்மிகவும் அவதிப்பட்டு மரணம்அடைந்தார், அப்பொழுது அவரின் பெற்றோர் அந்தபாட்டிக்கு அருகில் அவரை பலஆண்டுகள் அனுமதிக்கவில்லை. மெல்ல அவரதுகுடும்பத்தில் பலர் புற்றுநோயால்இறந்தனர். இந்த பிண்ணணியில்தான் கதிரியக்கம்ஏற்கனவே அதிகமாக உள்ளகன்னியாகுமரியில் அணு உலையைத் திறந்தால் இங்குள்ளமக்கள் மிக வேகமாகபுற்றின் வலையில் விழுந்து மடிவார்கள்என்பதால் கூடங்குளம் உலையை பற்றி அரசு அறிவித்தநாள் முதல் அது சார்ந்துசெயல்படத் தொடங்கினார். ஒவ்வொரு வருடமும்விடுமுறையில் அவர் இங்கு வரும்போது தன் குடும்பத்தினருடன் செலவிட்ட நேரத்தைவிட, இந்த ஆபத்தைஎப்படியும் விளக்கிவிட வேண்டும் என்று இங்குள்ளமக்கள் மத்தியிலும்,நாகர்கோவில் வாழ் பெரியவர்களுடனும்செலவிட்டதுதான் அதிகம். சிலவிடுமுறைகளில் இடதுசாரி நாடாளுமன்றஉறுப்பினர்களை எல்லாம் தில்லியில்சந்தித்து அனைவருக்கும் இது பற்றிய எல்லாஆதாரங்களையும் கொடுத்தாள்ளார்.பின் ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கே வந்துதங்கிவிட்டார். தொடர்ந்துஇந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் உள்ள அணுஆயுத, அணு உலை எதிர்ப்புஇயக்கங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.அமெரிக்காவில் வாழ்ந்தபின்ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறாமல். தன் தாய்நாட்டிற்காக எல்லாவற்றையும்விடுத்து தன் மனசாட்சியின் குரலைப் பின்தொடர்ந்துவந்த மிகச்சிலரில்முதன்மையானவர். 



நன்றி
திரு ஆ.முத்துகிருஷ்ணன்

No comments:

Post a Comment