Saturday 20 October 2012

பீட்சா


பீட்சா




ஹீரோ ஒரு பீட்சா ஷாப்ல டெலிவரி மேன்.அவனுக்கு ஒரு லிவ்விங்க் டுகெதர் லைஃப் பார்ட்னர்.மேரேஜ் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துறா. ஆனா லைஃப்ல செட்டில் ஆன பின்னாடி பண்ணிக்கலாம்னு சொல்லி மேட்டர் எல்லாம் முடிச்சு கரு தங்கிடுது.ரொம்ப வற்புறுத்துன பின் மேரேஜ்க்கு ஓக்கே சொல்றான்.

 பீட்சா கடை ஓனர் வீட்டுக்கு ஒரு டைம் இவன் போனப்போ அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் , அது பேய் பிடிச்ச மாதிரி  இருப்பதும் ( மே பி மன நலம் குன்றி ) தெரிய வருது.இந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேன்னு ஓனர் சொல்றார்.

 அடுத்த நாளே அவன் வாழ்க்கைல ஒரு திருப்பம். பீட்சா டெலிவரி பண்ண வந்த இடத்துல ஒரு வீட்ல மாட்டிக்கறான்.வீட்ல இருந்த ஒரே ஒரு லேடி கொலை செய்யப்பட்டு இருக்கா. உடனே ஹீரோ வெளில வர பார்க்கறான். முடில . லாக்டு. கொலை செய்யப்பட்ட லேடியோட கணவர் வீட்டுக்கு  வெளில வாசல்ல நின்னு கால் பண்றான். ஹீரோ எடுத்து பேசறார்.கணவர் ஹீரோவை நம்பலை.ஹீரோ தான் அவளை கொலை பண்ணி இருக்கனும்கறார்.


 அடுத்த திருப்பம். அந்த ஆளும் செத்து கிடக்கறான்.. அந்த வழியா ரோந்து போன  போலீஸ் 2 பேரு வர்றாங்க. இந்த வீட்ல ஒரு வாரமா போலீஸ் சீல் வெச்சிருக்கு. 4 கொலை நடந்த இடம் ஆச்சேங்கறாங்க..  ஹீரோ மேல சந்தேகப்பட்டு விசாரிக்கறாங்க . அவங்க கிட்டே இருந்து தப்பி வந்துடறான் ஹீரோ. அந்த 2 போலீஸும் அந்த பங்களாவுலயே மாட்டிக்கறாங்க.. 


http://tamil.cinesnacks.net/photos/actress/Ramya-Nambeesan/ramya-nambeesan-hot-093.jpg


அடுத்த திருப்பம்.ஹீரோயினை காணோம்.ஹீரோ தான் கொலை பண்ணிட்டாரா? அல்லது குடைக்குள் மழை ஆர் பார்த்திபன் மாதிரி அப்படி ஒரு கேரக்டரே இல்லையோ என சந்தேகப்பட வைக்குது ஹீரோவின்  நடவடிக்கைகள்.ஏன்னா ஹீரோவைத்தவிர வேற யாரும் ஹீரோயினை பார்த்ததில்லை . ஹீரோவோட ஃபிரண்ட்சோ, ஓனரோ பார்த்ததில்லை.

 என்ன தான் நடந்துச்சு என்பதை அட்டகாசமான திரைக்கதை உத்தி மூலம் சொல்லி இருக்காரு இயக்குநர்.இந்தப்படத்துல  யூகிக்க முடியாத பட்டாசான ட்விஸ்ட்ஸ் 2 இருக்கு. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்.

ஹீரோவா நடிச்சவர்  விஜய்சேதுபதி ஆல்ரெடி தென் மேற்குப்பருவக்காற்று படத்துல நடிச்ச ஹீரோதான். பயம், திகில் , கோபம், இயலாமை என நவ ரசங்களையும் காட்ட வாய்ப்பு. நல்ல நடிப்பு. சபாஷ்.. 


ஹீரோயின் ரம்யா நம்பீசன்.இவரைப்பற்றி வர்ணிக்க டைம் இல்லை.ஏன்னா இது ரொமான்ஸ் படம் இல்லை.. க்ரைம் த்ரில்லர் படம்.இவரை வர்ணிச்சுட்டு இருந்தா இயக்குநரை பாராட்ட டைம் இல்லாம போயிடும்.. ஆனாலும் இவரது டைட் டிரஸ் பார்க்கற ஆடியன்சை லூஸ் ஆக்கும் அளவு கிண்ணுனு இருக்கு.. 

மாலைப்பொழுதின் மயக்கத்திலே படத்துல வந்த காபி ஷாப் பேரர் இதுலயும் வர்றார். இவர் ஆல்ரெடி பல குறும்படங்கள்ல நடிச்சவர். இவர் நடிப்பும் நல்லாருக்கு. குறிப்பா பீட்சா கடை ஓனர்  பொண்ணு ஹீரோவை பேய் மாதிரி ஒரு லுக் விடும்போது பேய் நம்பிக்கையே  இல்லாதவர்கள் கூட முதுகுத்தண்டு சிலிர்க்கும் அளவுக்கு அவர் பார்வை.. அபாரம் 



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 


வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் -அபாரமான திரைக்கதை உத்தி,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் ,சபாஷ் படம், புதுமையான கதையை விரும்பும் அனைத்துத்தரப்பும் பார்க்கலாம் ஹீரோ பின்னால் ஓடாமல் திரைக்கதை அமைக்கத்தெரிந்தால் ஒரு சாதா படமும் சூப்பர் ஹிட் ஆகும்  என்பதற்கு இது ஒரு உதாரணம்

Friday 12 October 2012

மாற்றான் விமர்சனம்

மாற்றான் : விமர்சனம்...

   கே வி ஆனந்த் + சூர்யா கூட்டணியில் இரண்டாவது படம்.. 'கோ' இமாலய வெற்றிக்கு பிறகு கே வி ஆனந்த் இயக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் நண்பர்களுடன் சென்றேன்.
இவ்வளவு எதிர் பார்ப்பை ஏற்படுத்திய படம் first day second show ஹவுஸ் புல் ஆகவில்லை.. என்ன கொடுமை! 

    சரி படத்த பாப்போம்...அகிலன் தம்மு தண்ணி என ஜாலி யாக இருக்கும் கதாபாத்திரம்.. விமலன் கம்யுனிசம், ஒழுக்கம் என இருக்கும் நல்ல பையன். அகிலன் அஜித் பேன்...விமலன் விஜய் பேன். 

   ஹீரோக்களோட அப்பா பேபி மில்க் ப்ராடக்ட் கம்பெனி ஓனர் எல்லா கம்பெனியையும் அடிச்சு முன்னேரினாருனு எல்லாஅருக்கும் ஒரே குழப்பம்,அப்போ ஒரு ஃபாரின் லேடி பத்திரிக்கையாளர்னு சொல்லி அந்த கம்பெனிய வேவு பாக்க வராங்க, அவ எல்லா ரகசியத்தையும் தெரிஞ்சிகிறா.அதுல ஒரு திருப்பம் என்னனா அவங்க ஒரு ஃபாரின் உலவாளி.அவங்க அப்பா அமெரிக்காவுக்கு ஊக்கமருந்து தயார் செய்து கொடுக்கிரார்.

   இந்த மருந்த ஒரு மாட்டுக்கு கொடுத்தா அது தன் வாழ்நாளில் கொடுக்க்கும் பாலை 2 மாதத்தில் தந்துவிடும்,இதை தன் பால் பவுடரில் கலக்கிறார்.இதனை கண்டரியும் ஹீரோ அழிக்க புரப்படுகிறார்.

   இதுக்குமேல கதை சொன்னா சுவாரஸ்யம் கொரஞ்சி போயிடும்.
முதல் பாதியில் சூர்யா அட்டகாசம்.. அகிலன் விமலன் என்ற இரு கதாபாத்திரத்தை அருமையாக வேறுபடுத்தி காட்டி இருக்கிறார். படமும் அப்படியே கே.வி.ஆனந்த் + சுபாவிற்கே உரிய டிவிஸ்ட் அன்ட் டர்ன்ஸ் அடித்து பரபரவென செல்கிறது.. அதிலும் MGM நடக்கும் சண்டை காட்சி செம செம... காஜல் அகர்வால் வருகிறார் பாட்டு பாடுகிறார்.. முத்தம் கொடுக்கிறார்...நாணி கோணி பாடல் ரொம்பவும் அழகாக படம் பிடித்து இடுகிறார் கே.வி.ஆனந்த். எதிர் பார்த்த மாதிரியே முதல் பாதியில் நல்ல பையன் விமலன் செத்து போறாரு...

முதல் பாதி பாதி முடிந்தவுடன் அரங்கம் முழுவதும் கை தட்டல்.. அப்பா நம்ம செலவு பண்ணுன 100 ரூபாய் வீண் ஆகவில்லை என எல்லோரும் சந்தோசமாக இருந்தோம்.. உடனே கார்த்தி நடித்த "அலெக்ஸ் பாண்டியன்" ட்ரைலர் போட்டு நம்மை சில நிமிடம் சித்தரவதை செய்தார்கள்.

  முதல் பாதியே இப்படி என்றல் இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என எதிர்பார்ப்புடன் படம் பார்க்க தயாரானோம்.. அப்ப தான் விதியின் விளையாட்டு ஆரம்பமானது,டேய் என்ன விட்ருங்கடா என்று சொல்லும் அளவுக்கு ரொம்ம்ம்ப இழுத்துடாங்க. 

  ஆரமபித்த உடனே அதிரடி ட்விஸ்ட்... உடனே அடுத்த ட்விஸ்ட்... படம் உக்ரைன் நோக்கி பயணிக்கிறது... உடனே அடுத்த ட்விஸ்ட் அதில் ஒரு கிளை கதை...மறுபடியும் ஒரு ட்விஸ்ட்.. போதும் இதோட நான் நிறுத்தி கொள்கிறேன்..

    படத்தின் உண்மையான ஹீரோ எழுத்தாளர்கள் சுபா தான்.கதை,வசனம் செம ஷார்ப்.முதல் பாதியில் சூர்யா வழக்கம் போல செம ஆக்டிங்.இரட்டையர்களை வேருபடுத்தி காட்டுகிறார்.இரண்டாம் பாதியில் தான் இவருக்கு வேலை.மனுசன் சண்டை காட்சியில் பின்னி பெடல் எடுக்கிரார்.

     சில இடங்கள் விறு விறுப்பாகவும் .. பல இடங்கள் மெதுவாகவும் செல்கிறது... கிளைமாக்ஸ் ஒரு த்ரில் இல்லாமலேயே முடித்து விட்டார் கே வி ஆனந்த். படத்தில் வரும் அணைத்து சண்டை காட்சிகளும் அருமை.. லாஜிக் மிஸ்ஸிங் நெறயவே இருக்கிறது.. 

    இரண்டாம் பாதியில் நிறைய technical விஷயங்கள் சொல்கிறார்கள்.. செராய்ட்ஸ்.. அதோட விளைவுகள். அதோட ஆராய்ச்சி. இதற்கு பின்னல் இருக்கும் சில நாடுகள்... கடைசி ட்விஸ்ட் நம்ம சூர்யாவே ஒரு failure டெஸ்ட் ட்டுபு பேபி.. 

பிளஸ்:

கதை
ஒளிப்பதிவு(அனைத்து பாடல்களும் அருமை,கால்முளைத்த பூவே தவிர)
சூர்யா
வில்லன்
சண்டை காட்சிகள்

மைனஸ்:

தள்ளாடும் திரைக்கதை
முதல் பாதிக்கு ஈடுகொடுக்க முடியாத இரண்டாம் பாதி
இசை(பின்னனி இசை மக மட்டம்,காக்க காக்க,வேட்டையாடு விளையாடு இசை மாதிரியே இருக்கு)
லாஜிக் மீரல்கள்

எதிர்பார்க்கபடும் ரேட்டிங்

ஆனந்த விகடன் -43
குமுதம்-ஓகே


   படம் முடிந்த உடன் எனக்கு ஓகே அவரேஜ் என்ன தோன்றியது.. என் நண்பர்கள் சிலர் second half மொக்கை என்ன கருத்து தெரிவித்தார்கள். 

என்னளவில் 'கோ' தான் கே வி ஆனந்த்-ன் உச்சம்.


கதை பற்றி எதையும் எழுதவில்லை.. அதனால் எல்லோரும் படிக்கலாம்.





Saturday 6 October 2012

வாரிசுகளிடம் தமிழ் சினிமா

                              வாரிசுகளின் பிடியில் தமிழ் சினிமா...

இந்த தலைப்பில் நான் என் உணர்வை ஒரு பக்கமாவது வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிரேன்...

முதலாவதாக ”இயக்குனர்” A.L.விஜய் இவரை பற்றி கூறி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.இவர் பிரபல தயாரிப்பாளர் சங்க தலைவர் A.L அழகப்பன் அவரின் வாரிசு.....

தன்னை ஒரு நல்ல இயக்குனர் என வெளிப்படுத்த முதல் படத்தை கேராளாவில் வெளிவந்து தேசியவிருது பெற்ற கிரிடம் என்ற படத்தை உரிமம் பெற்று தமிழில் மொழிக்கேற்ப மாற்றம் செய்து இயக்கினார்.அதில் இவரின் வேலை குறைவு தான் என்றாலும் நல்ல இயக்குனர் எனும் பெயரை பெற்றார்.
அடுத்து இவரது இரண்டாவது படம் பொய் சொல்ல போறோம்,செம மொக்க படம்.

விட்ட இடத்தை பிடிப்பதற்காக அவர் எடுத்தது சென்னையை,1947 மெட்ராஸில்  ஆங்கிலேய ஆளுனரின்மகளும் ஒரு இந்தியனும் காதலித்தால்...இந்த தளத்தை அடிப்படையாக வைத்து வந்த படம் மதாராசபட்டினம்.படம் நல்ல இருந்ததாலும் பழைய சென்னையை நினைவு கூர்ந்ததாலும் படம் வெற்றி வாகை சூடி இவருக்கு நன்பெயரை ஈட்டி தந்தது.இருப்பினும் இப்படத்தை பார்த்தவர்களால் இது டைட்டானிக் படத்திலிருந்து உருவப்பட்ட ஒரு கதை எனபது கண்கூடாக தெரியும்.

அடுத்து தெய்வ திருமகள் படத்திற்க்கு வருவோம்,இங்கே இவர் கதையை மட்டும் உருவவில்லை ஒட்டு மொத்த படத்தின் திரைக்கதையும் உருவி தெய்வ திருமகளாக வெளியிட்டார்.அவர் சுட்டது சாதாரணமான படமாயிருந்தாலும் பரவால்லை ,அவர் சுட்டது I AM SAM என்ற ஆஸ்கார் விருது அள்ளிய திரைப்படம்.

இதையும் விட மிக மோசமான ஒன்று தன் வாழ்நாள் லட்சிய படம் என்று எடுத்து அவர் தனது உதவி இயக்குனரின் வாழ்வில் தாண்டவம் நடத்திய தாண்டவம் படம் தான்.தனது உதவி இயக்குனர் UTV நிறுவனத்துடன் சேர்ந்து எடுக்கவிருந்த படத்தை(விக்ரமாதித்யன் என பதிவு செய்ய பட்டிருந்தது) தனது செல்வாக்கை பயன்படுத்தி கதை,திரைகதை என அனத்தையும் சுட்டு எடுக்க பட்டது தான் இந்த தாண்டவம் ...இப்ப சொல்லுங்க தன் ஒரு படமும் இவருடய சொந்த திறமையால் எடுக்க பட்டது இல்லை..ஆனால் இவர் தற்போது உள்ள இயக்குனர்களில் முன்னனியில் இருப்பதில் ஒருவர்...



அடுத்து ஜெயம் ராஜா..இவரின் தந்தை எடிட்டர் மோஹன்...

தனக்கென ஒரு பாணி என்று இல்லாமல் தெலுங்கில் வரும் அனைத்து நல்ல குடும்ப படங்களையும் ரீமேக்கி விடுவதே இவருடைய அசாத்திய திறமை என்றே கூரமுடிகிரது.ஆனால் இவர் அத்தனை படங்களையும் ரீமேக் என்ற பெயரில் எடுத்துவிட்டு,தன் இயக்கத்தில் கடைசியாக வந்த வேலாயுதம் படத்தில் மட்டும் தன் சொந்த கதை திரைகதை என் நம்மிடம் கதை விட்டாலும் அவர் இந்த படத்தையும் தெலுங்கில் நாகர்ஜுனா நடிப்பில் வெளிய்யான ஆசாத் என்ற படத்தின் தழுவல் என்பது படம் பார்த்த அனைத்து தரப்பினரும் உணர்ந்த உண்மை...இருப்பினும் இவரும் இப்போதையா டாக் ஆஃப் தி கோலிவுட் என்பது தான் கசப்பான உண்மை...

இவர்களை விட திறமையான இயக்குனர்கள் தமிழில் இருந்தாலும் அவர்களை இவர்கள் போன்றோர் தனது செல்வாக்கால் ஆரம்பத்திலே நசுக்கிவிடுவது ஒவ்வொரு பெரிய படங்களின் ரிலீசன்றே தெரிந்து விடுகிறது(எ.கா தசவதாரம்,7ஆம் அறிவு,மாற்றான்,தாண்டவம்)



இது இயக்குனர்கள் பற்றியது தான் அடுத்த பதிப்பில் நடிகர்களை பற்றி தொடரும்.....